25 68402fdbe8cd6
இலங்கைசெய்திகள்

அநுரவின் அமைச்சருக்குப் பெறுமதியான வீடு! நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா

Share

அனுராதபுரம் நகரின் நடுவில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதி ஒருவர் 1.5 மில்லியன் ரூபாவுக்கு பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி ஒருவரால் இந்தப் பத்திரம் எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த உடைமை 1.5 மில்லியன் ரூபாவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான மதிப்பு 1.5 மில்லியனை விட அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க அடிக்கடி இந்த வீட்டிற்கு வருவார் என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பிலான ஆவணங்களின் நகலை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தாயார் என்றும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...