24 667a5e464a6d6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு

Share

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு

பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்பினருடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தங்கள் நாளை (26.06.2024) கைச்சாத்திடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய (25) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நேற்று (24) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

குறிப்பாக நாடு திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு உதவிகளை வழங்கிய நட்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி பெருமளவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்நிலையில், சீன அரசாங்கத்தின் தலைமைப் பாரிஸ் உதவிக் குழுக்கள் உலக சமூகத்துடனும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களுடனும் பெரும் எண்ணிக்கையிலான கலந்துரையாடல்களை நடாத்திய ஜனாதிபதி, நிதியமைச்சு, ஸ்ரீ மத்திய வங்கியின் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் நீண்ட விளக்கத்தை நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.

இதனையடுத்து இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் உரிய தரப்புகளுடன் நாளைய தினம் (26) இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...