9 27
இலங்கைசெய்திகள்

அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்! சந்தேகநபரின் வாக்குமூலத்தை ஆராய உத்தரவு

Share

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேகநபர், இன்று நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தவில்லை என்றும், அவரது சம்மதத்துடன் தான் அனைத்தும் இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதை குறித்த பெண்ணுக்கு எதிரான அத்துமீறல் என்று அழைப்பதில் தனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வாசலில் இருந்து வைத்தியர் தங்கும் விடுதி வரை கண்காணிப்பு கருவிகள் இருந்தால், அவற்றைச் சரிபார்த்து, அந்த நேரத்தில் அவரின் செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வைத்தியர் தன்னை ஒரு குற்றத்தில் சிக்க வைத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்கப்பட்டபோதே சந்தேகநபர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்படி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகாத நிலையில், அவர் தனது சொந்தக் கருத்துக்களை மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...