30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் தீர்மானிக்கப்பட்டது

Share

ஜனாதிபதி அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் தீர்மானிக்கப்பட்டது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக அனுரகுமார இந்தியா செல்லவுள்ளார்.

எனினும், இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பெரும்பாலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனுரகுமார திஸாநாயக்கவை, முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகராக ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...