25 6849454172978
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் தரப்பின் ஆதரவை கோரிய அநுர கூட்டணி

Share

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் கட்சியின் ஆதரவையும் தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது கூட்டணி இரண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மேயரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...