4 37
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

Share

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்போது எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு திட்டமில்லாமல் ஜனாதிபதியாக இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

அநுரகுமாரவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சிக்கு வருகிறோம், நீங்கள் உங்கள் அரசாங்கத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவோம்.

இப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு நாங்கள் உதவுகின்றோம்.

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும். அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன? அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் என்ன, ஆணைக்குழுக்கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? இது எங்கள் திட்டத்தில் உள்ளது. இழந்த செல்வத்தை மீட்டெடுக்கும் பணியை அநுரகுமாரவால் செய்ய முடியும்.

சஜித் பிரேமதாசவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக்க எந்த காரணமும் இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவரானால், எதுவும் செய்வதற்கில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...