4 37
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

Share

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்போது எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒரு திட்டமில்லாமல் ஜனாதிபதியாக இருப்பதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.

அநுரகுமாரவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம், நாங்கள் எதிர்க்கட்சிக்கு வருகிறோம், நீங்கள் உங்கள் அரசாங்கத்தை அமையுங்கள், நாங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவோம்.

இப்போது அரசு ஊழியர்களின் சம்பளம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு நாங்கள் உதவுகின்றோம்.

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும். அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் என்ன? அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் என்ன, ஆணைக்குழுக்கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன? இது எங்கள் திட்டத்தில் உள்ளது. இழந்த செல்வத்தை மீட்டெடுக்கும் பணியை அநுரகுமாரவால் செய்ய முடியும்.

சஜித் பிரேமதாசவை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக்க எந்த காரணமும் இல்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவரானால், எதுவும் செய்வதற்கில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேவையற்றவர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...