1 33 scaled
இலங்கை

செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர

Share

செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்து மறுநாள் நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும்.

ஊழல், மோசடியை ஒழிக்கும். வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனைப் பெற முடியும்.

அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கட்சி தாவும் தவளை அரசியலுக்குத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவு கட்டப்படும்.

இந்தப் பக்கம், அந்தப் பக்கம் எனக் கட்சி தாவல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இப்படியான தவளை அரசியலை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

எனவே, தவளை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். எமது நாட்டுக்குக் கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது.

தாவும் அரசியல் தவளைகளுக்கு எமது அணியில் இடமில்லை. இவ்வாறு தாவும் தவளைகள் இணைந்து கூட்டணிகள் அமைத்திருந்தாலும் அவை எமக்குச் சவாலாக அமையாது. கட்சி தாவினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்குரிய சட்டம் இயற்றப்படும்.

தற்போது அந்தச் சட்டம் இருந்தாலும் அதனைப் பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும். அசிங்கமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்”எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

26 6978f30ec21fc
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் மௌனத்தின் குரலாக இருந்தவர்: மறைந்த மனித உரிமைப் போராளி ரி.குமாருக்கு வவுனியாவில் அஞ்சலி!

மனித உரிமை ஆர்வலர் ரி.குமார் என்று அழைக்கப்படும் த. முத்துக்குமாரசாமிக்கான உருக்கமான அஞ்சலி நிகழ்வு, வவுனியாவில்...

UTV 59 960x540 1 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: விருந்துபசாரத்தின் போது தாக்குதல் – காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

26 6978aed5d377a
செய்திகள்அரசியல்இலங்கை

2015-ல் ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் ஐ.தே.க பணம் கொடுத்தது: ராஜித சேனாரத்ன அதிரடித் தகவல்!

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும்...