5 23
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...