5 23
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...