5 23
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அநுர வெளியிட்டுள்ள நம்பிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது, இன்னும் ஒரு சிறிய தொகை மட்டுமே இறுதி செய்ய எஞ்சியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால கடமைகளை நிர்வகிப்பதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதால், இதன்படி, 2028 ஆம் ஆண்டளவில், மறுசீரமைக்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மதிப்பாய்வு 2025 ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி ஆரம்பத்தில் முடிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...