3 3
இலங்கைசெய்திகள்

ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கக்கூடாது: அநுரகுமார வேண்டுகோள்

Share

ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் ஆணை வழங்கக்கூடாது: அநுரகுமார வேண்டுகோள்

ராஜபக்சவினர் குடும்ப ஆட்சியையே முன்னெடுத்தனர். அந்த குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரிக்கிலகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

79 வயதான மகிந்த ராஜபக்ச தமது மகனுக்காக மேடையேறுகின்றார். கடும் கஷ்டத்துடன் அவர் மேடைகளில் ஏறுகின்றார். நடக்கக் கஷ்டப்படுகின்றார். இவ்வளவு கஷ்டப்பட்டு மேடைகளில் ஏறுவதற்கான காரணம் பொதுமக்களின் நலன் கருதியா? இல்லை. தமது பிள்ளையின் வெற்றிக்காகவே.

எனவே, ராஜபக்ச குடும்ப ஆட்சி மீண்டும் வர மக்கள் ஆணை வழங்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...