tamilni 3 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு குறி வைக்கும் சிங்கள கடும்போக்காளர்கள்! தீ வைக்கும் முயற்சி

Share

தமிழ் மக்களுக்கு குறி வைக்கும் சிங்கள கடும்போக்காளர்கள்! தீ வைக்கும் முயற்சி

இலங்கையில் சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயம் ஒன்றைக் கொண்டு வந்து தீ வைக்க முயற்சி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் நனைந்துள்ள தீப்பெட்டிக்கு தீ வைக்கப்போகிறார்கள், அது முன்னரைப் போன்று பற்றப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (30.09.2023) பொலன்னறுவை – கருதுவெல பகுதியில், ஓய்வு பெற்ற முப்படைகள் மன்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது முஸ்லிம் மக்களுடன் பிரச்சினை இல்லை. மீண்டும் தமிழர்கள் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர்.

குருந்தூர் விகாரையை மையமாக வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லம் முற்றுகையிடப்பட்டது. சிங்கள கடும்போக்காளர்கள் புதிய விடயத்தைக் கொண்டுவந்து தீ வைக்கப் போகிறார்கள்.

ஆனால், தீ பற்றப்போவதில்லை. நனைந்துள்ள தீப்பெட்டிக்கு தீ வைக்கப்போகிறார்கள். முன்னரைப் போன்று பற்றுவதில்லை. தமிழ் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதிபதி சரவணராஜா கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.

நீதிபதியின் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை சிந்திக்கவேண்டியுள்ளது.

ஒரு நீதிவான் அரசாங்கத்திற்கு எதிராக பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலையாகும்.

யுத்தம் முடிந்த பின்னும் ஆட்சியாளர்கள் எப்போதும் பிரிவினையை விரும்புகின்றனர், ஒற்றுமையை ஒருபோதும் விரும்பவில்லை.

எனவே, இவற்றின் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...