3 30
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

Share

அநுரவின் ஆட்சிக்கு ஆபத்தாகும் மூன்று நாடுகள்

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படுமாயின் அது பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களின் வழக்குகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என பிரித்தானிய மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காரணமாக பல பேரின் வழக்குகளில் ஆழமான விசாரணைகளை முன்னெடுக்காது, ஆதாரங்களை சரியாக பரிசீலிக்காமையினால் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் போலியான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது மிக இலகுவாக பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவினை பொறுத்தமட்டில் ஏனைய நாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை விடயத்தில் இதுவரை அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்படும் பட்சத்தில் அநுரவின் ஆட்சிக்கு அவை ஆபத்தாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...