6 5
இலங்கைசெய்திகள்

அநுர – விஜேபாலவை கொலை செய்ய திட்டம் : பிரித்தானியாவில் இருந்து கசிந்த தகவல்

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரை தற்கொலை தாக்குதல் அல்லது ஸ்னைப்பர் தாக்குதல்களில் கொலை செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் இன்றும் நிலவுவதாக இலங்கை பொலிஸ் துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான இரகசிய விசாரணைகள் நடைபெறுவதாகவும் விசாரணைகளை நடத்தும் அதிகாரிகளுடன் தான் நேரடி தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தம் ஒன்றுக்கு பிரித்தானியாவில் இருந்து வழங்கிய கலந்துரையாடலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணை தகவல்களை பொது வெளிக்கு தெரியப்படுத்த முடியாதுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளதோடு அன்புக்கும் ஆளாகியுள்ளனர்.

ஆனால் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெரும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

நேரடியாக குறிப்பிட முடியாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நுற்றுக்கு நுறு வீதம் ஆபத்து நெருங்கிவிட்டது.அவரை படுகொலை செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

இன்னும் ஒரு வருடத்தில் இலங்கை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகப்போகிறது. அதை விரும்பாத சக்திகள் இவர்களை முடித்து விடவே சிந்திப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...