7 5
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் படைகளில் மோசடியாக பதவிகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யோஷித ராஜபக்சவுக்கு சட்டவிரோதமாக கடற்படையில் உயர் பதவிகள் வழங்கப்பட்டதைப் போலவே நெவில் வன்னியாராச்சிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பாதுகாப்புப் படைகளில் சிலருக்கு இந்த முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் புலனாய்வு பத்திரிகையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மகிந்த ராஜபகசவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தை விட அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை இருப்பது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்த நிலையிலேயே அவருக்கு மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...