12 1
இலங்கைசெய்திகள்

இந்திய அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்

Share

இந்திய அதானியுடன் மீண்டும் பேச விரும்பும் அநுர அரசாங்கம்

இந்திய அதானி திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு, இலங்கையின் எரிசக்தி அமைச்சகம், அதானி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரில், 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்குள், இரண்டு காற்றாலை மின் திட்டங்களும், மின்மாற்றக் குழாய்களையும் கட்டுவது அடங்குகின்றன.

முன்னதாக 0.08 அமெரிக்க டொலர் விலை நிர்ணயிக்கப்பட்டதால், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கட்டணங்களைக் குறைக்குமாறும் கேட்டுக் கொண்டது.

எனினும், இதனை ஏற்றுக்கொள்ளாத அதானி நிறுவனம், திட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், கடந்த திங்கட்கிழமை அதானி நிறுவனத்திற்கு, எரிசக்தி அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.

அதில், இரண்டு வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு கோரியுள்ளதாக, அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம்: வீடு சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூ. 25,000 ஆக உயர்வு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம்...

MediaFile
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...