24 661126ec76c9a
இலங்கைசெய்திகள்

இரத்தக்களரி ஏற்படாதவாறு அரசியலில் ஈடுபடுங்கள்

Share

இரத்தக்களரி ஏற்படாதவாறு அரசியலில் ஈடுபடுங்கள்

இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாதவாறு பொறுப்பான அரசியலில் ஈடுபட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) ’71 முன்னோடி சோசலிச அமைப்பு’ கோரிக்கை விடுத்துள்ளது.

71 முன்னோடி சோசலிச அமைப்பின் தலைவர் கல்யாண கருணாரத்ன இந்த கடிதத்தை கலவெல்லகொட சந்தலோக்க தேரர் ஊடாக அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

71ஆம் ஆண்டு கிளர்ச்சியின் 53 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இரத்தம் சிந்தாமல் இருப்பதற்காக தமது அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் இவ்வாறானதொரு இளைஞர் எழுச்சிக்கான பின்னணி தயாராகி வருவதை அவதானிக்கப்படுகிறது.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு நல்லெண்ணத்துடன் செயற்படுமாறு அனுரவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...