12
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

Share

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் உறுப்பினர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை குழுவின் தலைவர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவால், பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை கிடைத்தவுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு சட்டமூலம் அடுத்த மாதத்திற்குள் தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தில் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் என திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.

சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களை அடையாளம் கண்டு, அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்தது.

பின்னர், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு சட்டமூலத்தை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி சட்டத்தரனி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...