rtjy 252 scaled
இலங்கைசெய்திகள்

ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற விடமாட்டோம்

Share

ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற விடமாட்டோம்

அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஊவாகம தொகுதிக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆகும் போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும், ரணிலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ளன.

தேசிய அளவில் சிங்கப்பூராக மாற்றுவதாக கூறியும், ஆசியாவின் அதிசயமாக மாற்றுவதாகக் கூறியும் மக்களை ஏமாற்றினர்.

மக்கள் தற்போது முடியுமான வரை பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். மீண்டும் மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வளவு நாட்களும் மறைத்து வைத்திருந்த விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டன.

மக்கள் முன்னிலையில் உண்மை வெளிப்படுவதை நிறுத்தவே இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சட்டவாக்கத்தையும் அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
26 696f67e3b313d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை மீளாரம்பம்: நோயாளிகளின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan)...

24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு...

Archuna 1
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே...

MediaFile 7 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் இன்று நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு!

இன்று (20) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மதிய...