24 667b6a3d41a43 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்

Share

இலங்கையில் மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாக கூறப்படும் செய்திகளை¸ இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த ஊகங்களுக்கு மாறாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பொன்சேகாவிற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை பொன்சேகா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இதுவரைக்கும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் முன்னதாக தம்மை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமாறு மகிந்த தரப்பிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அதனை மகிந்த தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ரணிலுக்கு ஆதரவளிக்கவில்லையென்றால், தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவையே ஜனாதிபதி வேட்பாளராக அவர்கள் தெரிவு செய்ய விருப்பம் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...