இலங்கைசெய்திகள்

இலங்கையில் மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்

Share
24 667b6a3d41a43 2
Share

இலங்கையில் மேலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாக கூறப்படும் செய்திகளை¸ இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த ஊகங்களுக்கு மாறாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பொன்சேகாவிற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை பொன்சேகா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இதுவரைக்கும் சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் முன்னதாக தம்மை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமாறு மகிந்த தரப்பிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அதனை மகிந்த தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ரணிலுக்கு ஆதரவளிக்கவில்லையென்றால், தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவையே ஜனாதிபதி வேட்பாளராக அவர்கள் தெரிவு செய்ய விருப்பம் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...