1 5
இலங்கைசெய்திகள்

இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

Share

இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

இலங்கை நீதிமன்றால் வழங்கப்பட்ட மற்றுமொரு முக்கிய தீர்ப்பில், இலங்கையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமண இரத்து ஆணையின் செல்லுபடியை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

இதன்படி, அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைப் பெற்ற தம்பதியரின் திருமணத்தை முறித்துக் கொள்வதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான்ன (Chandima Edirimanna ) பிறப்பித்துள்ளார்.

மற்றொரு நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விவாகரத்து ஆணையை அங்கீகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மாவட்ட மேலதிக நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்

முன்னதாக, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் அண்மைய தீர்ப்பு ஒன்றில், இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் வேறொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமணத்தை கலைத்ததை நிரூபிக்கும் ஆவணத்தை ஏற்றுக்கொள்வதற்கு தடையில்லை என்று கூறியிருந்தது

எவ்வாறாயினும், இந்த ஏற்பு நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...