7 43
இலங்கைசெய்திகள்

வாகனங்களின் வரி குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Share

வாகனங்களின் வரி குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்பார்த்ததை விட கேள்வி குறைவாக இருந்தால், வாகனங்களுக்கான வரிகளை  இலங்கை குறைக்கக்கூடும் என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கையிருப்புக்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியச் செலாவணியில் வரம்பு இருப்பதால் மத்திய வங்கி ஒரு வழிகாட்டியை வழங்கியுள்ளது என்று அமைச்சர் ஜயந்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

விலையை அதிகரிக்க வரிகளை மாற்றுவதாகவும், அதன் பின்னரான நடப்பு விவகாரங்களை கருத்திற் கொண்டு இறக்குமதி வரிகளைக் குறைக்க முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கடன் கடிதங்களைத் திறப்பதில் உள்ள ஆர்வம் இருந்த போதிலும் அதில் அதிகரிப்பு இல்லை என்று பிரதி அமைச்சர் கூறினார்.

இலங்கை வாகனம் தொடர்பான வரிகளில் சுமார் 700 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.

வாகன இறக்குமதிகள் வரிகளை வசூலிப்பதற்காக மட்டும் தளர்த்தப்படவில்லை எனவும், பொருளாதார அபிவிருத்திக்கு அது உதவும் என்று அமைச்சர் ஜயந்த கூறினார்.

அந்த நடவடிக்கைகள் வருமானத்தையும் உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...