24 662ddc891cb58
இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

Share

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவுக்கு பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் அதிபராக இந்த வருட மே தினக் கூட்டத்தில் பங்கேற்கின்றார் என பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் உத்தேச அதிபர் தேர்தலை மையப்படுத்தி பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு கொழும்பு – மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உத்தேச அதிபர் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் அதிபர் ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த அதிபர் உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் டிரான் அலஸ் (Tiran Alles) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...

25 694a8ad22f8c4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ நிறுவனத்திற்கு 6.6 லட்சம் புதிய காலி சிலிண்டர்கள் கொள்வனவு: அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்திற்குப் புதிய காலியான எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை...

1678941867 1678934490 Gun L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராகமவில் கைவிடப்பட்ட நிலையில் T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!

ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கி...