24 662d399a25b52
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்

Share

வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்

சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி நாளிதழ்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் வான்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகன வகைகளின் ஆரம்ப விலை ஒன்றரை கோடி ரூபாய் என விளம்பரங்களில் காட்டப்பட்டுள்ளது.

இந்த வகையைச் சேர்ந்த பத்து வருடங்கள் பழமையான வான்கள் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதன் பின்னணியில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமையால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...