16 1
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

Share

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணம் – பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்கவின் 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என ஆளுநர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் – சென்னை (Chennai) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் (Alliance Air) விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு விமான சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...