நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

23 657bedcda2b5e

நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2 வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 311,269 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காகவும், கடந்த ஆண்டில் 297,656 பேரும் வெளியேறியுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் 70% சதவீதமானவர்கள் தொழில்ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25 – 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version