25 2
இலங்கைசெய்திகள்

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்

Share

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்

இந்த ஆண்டு நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி, முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் (Angelo Mathews) தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி, இந்த வருடம் நடைபெற்ற உலககிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

இதனையடுத்து, கருத்து தெரிவிக்கையிலேயே மெத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு இந்த தோல்வியை நாம் எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக்கோப்பையை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு மெத்தியூஸின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.

குறித்த தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.

மேலும், இன்றையதினம் (16.06.2024) நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியினை எதிர்கொள்கின்றது. இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறிய போதிலும் புள்ளிபட்டியலில் சற்று முன்னேறும் நோக்கத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
11 9
செய்திகள்உலகம்

ஈரான் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி: டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புட்டின் தொலைபேசி வாயிலாக ஆலோசனை

மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து,...

10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...