25 2
இலங்கைசெய்திகள்

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்

Share

முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்! மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்

இந்த ஆண்டு நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி, முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் (Angelo Mathews) தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி, இந்த வருடம் நடைபெற்ற உலககிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

இதனையடுத்து, கருத்து தெரிவிக்கையிலேயே மெத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு இந்த தோல்வியை நாம் எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக்கோப்பையை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு மெத்தியூஸின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.

குறித்த தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.

மேலும், இன்றையதினம் (16.06.2024) நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியினை எதிர்கொள்கின்றது. இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறிய போதிலும் புள்ளிபட்டியலில் சற்று முன்னேறும் நோக்கத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...