24 6688e2de494e3
இலங்கைசெய்திகள்

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Share

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மன்னார் (Mannar) – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (05.07.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கம்பிகளின் மொழி பிரேம் என அழைக்கப்படும் 42 வயதான கோபாலகிருஷ்ணன் கோகுல் பிரேம்குமார் என்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, திடீரென தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...