பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி!

Baby

பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி!

வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது.

மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

அதன்பின் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version