rtjy 153 scaled
இலங்கைசெய்திகள்

அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம்

Share

அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம்

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பவனியை மறித்து சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவமானது நேற்று (15.09.2023) மாலை 3 மணிக்கு அக்கரைப்பற்றில் பதிவாகியுள்ளது.

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு நேற்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரையில் திலீபனின் நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவிலில் இருந்து யாழ். நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் அருட்தந்தை சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னாரது உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரம்பித்து வைத்தனர்.

பொத்துவிலில் இருந்து திருக்கோவில் வரையுமுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் காத்திருந்த மக்கள் ஊர்தி பவனியை வீதிகளில் மறித்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்த வாகன ஊர்திபவனியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் திடீரென 7 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்துள்ளனர்.

மேலும் விடுதலைப் புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தியவாறு சிங்கக்கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வீதியின் மற்றைய பகுதியால் வாகன ஊர்தியை வாகன சாரதி செலுத்தியதையடுத்து வாகன பவனியானது கல்முனை பாண்டிருப்பை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று (16.09.2023) களுவாஞ்சிக்குடியில் வாகன ஊர்திபவனி ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்குச் சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....