இலங்கைசெய்திகள்

கோடீஸ்வரன் எம்.பி.யின் அயராத முயற்சி : வழமைக்கு திரும்பும் குடிநீர் விநியோகம்

Share
13 8
Share

கோடீஸ்வரன் எம்.பி.யின் அயராத முயற்சி : வழமைக்கு திரும்பும் குடிநீர் விநியோகம்

அம்பாறை(ampara) மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று இரவு அல்லது நாளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (kaveenthiran kodeeswaran) தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாகாடு பகுதியில் நான்கு இடங்களில் நீர்விநியோக குழாய்கள் உடைப்பெடுத்ததன் காரணமாக கடந்த 12நாட்களுக்கு மேலாக பல பகுதிகளுக்கான குடிநீர்விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இதன்காரணமாக காரைதீவு, மாளிகைக்காடு,நிந்தவூர்,சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தததுடன் மக்கள் பெரும் கஸ்டங்களையும் எதிர்நோக்கிவந்தனர்.

இந்த நிலையில் குறித்த உடைவினை சீர்படுத்தும் செயற்பாடுகள் மந்தகதியில் நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த உடைவினை சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

இன்று நைனாகாடு பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறித்த பணிகளை பார்வையிட்டதுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கைதர் அலி,பொறியியலாளர் மயூரன் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் குடிநீரை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்.

தற்போது குறித்த பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களின் உடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் குடிநீர் விநியோகத்தினை செய்யமுடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...