24 6654480d96c4a
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம்

Share

இலங்கை வந்த வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி : ஹோட்டலுக்குள் மர்மம்

தென்னிலங்கையில் வெளிநாட்டு பயணி ஒருவரின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அளுத்கம பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1.45 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் திருடப்பட்டுளு்ளது.

இது குறித்து தொடர்பில் அளுத்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி அமெரிக்க பிரஜையான ஆன்ட்ரூ கிறிஸ்டோபர் லூகாஸ் என்பவரின் பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று அதிகாலை 4:20 மணியளவில் ஹோட்டல் அறைக்குள் திருடர்கள் புகுந்துள்ளதை அமெரிக்க அவதானித்துள்ளார்.

அங்கிருந்தவர்களிடம் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அறையினை சோதனையிட்ட போது, 4,000 அமெரிக்க டொலர்கள், 210,000 இலங்கை ரூபாய்கள், அவரது கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...