24 662f3e43e5623
இலங்கைசெய்திகள்

மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள அறிவிப்பு

Share

மக்களுக்கான கொடுப்பனவுகள்: வெளியாகியுள்ள அறிவிப்பு

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மேற்படி விடயம் குறித்த யோசனை முன்மொழியப்பட உள்ளது எனவும் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்தோடு கூலித்தொழிலாளி என்ற பெயர் மாறுவதுடன் கௌரவமான தொழில் அவர்களுக்கு கிடைப்பதோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மற்றும் தேசிய தலைவர்கள் பலர் எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்களென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான ஐயப்பாடு காரணமாக நேரடியாக இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டிய போதிலும் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...