இலங்கைசெய்திகள்

உக்ரைனின் நிலை இலங்கைக்கு வரக் கூடாது: அலி சப்ரியின் ஆலோசனை

Share
25 1
Share

உக்ரைனின் நிலை இலங்கைக்கு வரக் கூடாது: அலி சப்ரியின் ஆலோசனை

வல்லரசு போட்டிகளால், உலகம் துருவமுனைக்கப்படும் நிலையில், இலங்கை, அதன் நீண்ட கால அணிசேராமை வெளியுறவுக் கொள்கைக் கோட்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் மூலோபாய இருப்பிடம், பொருளாதார அபிலாஷைகள் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவை அனைத்து உலகளாவிய தரப்புக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தநிலையில், அந்த நாடுகளின் புவிசார் அரசியல் விளையாட்டுகளில், இலங்கை பகடைக்காயாக மாறாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சிறிய மற்றும் நடுத்தர நாடுகள், பெரிய அதிகாரப் போராட்டங்களின் குறுக்குவெட்டில் சிக்கிக் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்த பாடம் தெளிவானது. எனவே, இலங்கை அணிசேராமையை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் இலங்கையின் இறையாண்மை ஒருபோதும் சமரசம் செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...