27 19
இலங்கைசெய்திகள்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

Share

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

சிஎஸ்சி என்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval), தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்

இரண்டு நாள் பயணமாக அவர் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

இந்தியா, மொரீசியஸ், மாலைதீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிஎஸ்சி இன் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது சொந்த மூலோபாயக் கவலைகளை கருத்திற்கொண்டு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாநாட்டை கையாள்கிறது.

இந்தநிலையில், இந்த மாநாட்டில், தற்போதைய பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதறான உத்திகள் பற்றி விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ;ந்தியாவின் தோவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...