6 32
இலங்கைசெய்திகள்

துபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞனுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

Share

துபாயிலிருந்து கட்டார் வழியாக நாடு திரும்பிய இலங்கை இளைஞர் ஒருவரை விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடத்தல் முயற்சி இடம்பெறவுள்ளமை தொடர்பில் தகவல் அறிந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் பிரிவு அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை முடித்துக்கொண்டு விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற முற்பட்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவரது பைகளில் இருந்து ஒரு வகையை சேர்ந்த 20,000 சிகரெட்டுகளும், மற்றொரு வகையை சேர்ந்த 3,600 சிகரெட்டுகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், ஓ.ஐ.சி விமான நிலைய பொலிஸ் அதிகாரி எல்மோ மால்கம் மற்றும் அவரது குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...