18 3
இலங்கைசெய்திகள்

மீண்டும் வரிசை யுகம்! நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

Share

மீண்டும் வரிசை யுகம்! நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜனாதிபதி

அரசாங்கத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்துகொண்டு கருத்துத் தொிவித்த போதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பில் அவா் மேலும் தொிவிக்கையில்,” நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தங்களை மாற்ற முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை இழக்க நேரிடும். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை மாற்றினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

2035ஆம் ஆண்டுக்குள் நாட்டை, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கிலேயே பொருளாதார பரிமாற்றச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் சுமையை குறைத்து மாகாணங்களுக்கு அபிவிருத்தியை பகிர்ந்தளிக்கும் வகையில் மாகாண சபைகளை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...