24 660275f96ad98
இலங்கைசெய்திகள்

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

Share

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில அதிகாரிகள் குறித்த திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை விரைவாகக் கண்காணிக்க உதவுவதில்லை” என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் நாட்டிற்கு நேரடியான பலன் இருந்தாலும் அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டமையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“வடக்கு-கிழக்கு பிரதேசம், முதலீட்டின் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், இலங்கையில் அதன் சமீபத்திய பல பரிமாண பாதிப்பு சுட்டியை வெளியிட்டது.

அதில் வடக்கு-கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பல பாதிப்புகளை கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பரிமாண பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இருந்த போதிலும், இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை விஞ்ஞானியான ரொஹான் பெத்தியகொட, அதானியின் இந்த திட்டத்தை “மற்றொரு வீணான மோசடி” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...