24 660275f96ad98
இலங்கைசெய்திகள்

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

Share

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில அதிகாரிகள் குறித்த திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை விரைவாகக் கண்காணிக்க உதவுவதில்லை” என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் நாட்டிற்கு நேரடியான பலன் இருந்தாலும் அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டமையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“வடக்கு-கிழக்கு பிரதேசம், முதலீட்டின் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், இலங்கையில் அதன் சமீபத்திய பல பரிமாண பாதிப்பு சுட்டியை வெளியிட்டது.

அதில் வடக்கு-கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பல பாதிப்புகளை கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பரிமாண பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இருந்த போதிலும், இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை விஞ்ஞானியான ரொஹான் பெத்தியகொட, அதானியின் இந்த திட்டத்தை “மற்றொரு வீணான மோசடி” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...