24 660275f96ad98
இலங்கைசெய்திகள்

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

Share

அதிருப்தி அடைந்துள்ள இலங்கை அதிகாரிகள்

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் அதீத ஈடுபாட்டால் இலங்கை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில அதிகாரிகள் குறித்த திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை விரைவாகக் கண்காணிக்க உதவுவதில்லை” என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தால் நாட்டிற்கு நேரடியான பலன் இருந்தாலும் அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 26 ஆண்டுகால ஆயுத மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டமையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“வடக்கு-கிழக்கு பிரதேசம், முதலீட்டின் பற்றாக்குறையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், இலங்கையில் அதன் சமீபத்திய பல பரிமாண பாதிப்பு சுட்டியை வெளியிட்டது.

அதில் வடக்கு-கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்களில் பெரும் சதவீதத்தினர் பல பாதிப்புகளை கொண்டிருப்பதாகக் காட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பரிமாண பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

இருந்த போதிலும், இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மை விஞ்ஞானியான ரொஹான் பெத்தியகொட, அதானியின் இந்த திட்டத்தை “மற்றொரு வீணான மோசடி” என்று கூறியுள்ளார்.

அத்துடன் அதன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...