tamilni 200 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முக்கிய விமான நிலையங்களை குறிவைக்கும் இந்திய நிறுவனம்!

Share

இலங்கையில் முக்கிய விமான நிலையங்களை குறிவைக்கும் இந்திய நிறுவனம்!

இலங்கையின் மூன்று விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான பேச்சுக்கள் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மூன்று விமான நிலையங்களினதும் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை அதானி குழுமம் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கும் அதானி குழுமத்துக்கும் இடையில் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கைக்கு சுமார் 1.48 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவர்களுக்கான வசதிகள் விமான நிலையங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனியார் பங்காளியாக அதானி குழுமம் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் அதானி குழுமம் இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை, மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...