24 6655714a617c8
இலங்கைசெய்திகள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Share

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு(nilantha jayawardena) எதிரான மனுவை பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (28) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான திகதியை வழங்குமாறு பிரதிவாதி நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, ஜூன் 25ம் திகதி அல்லது அதற்கு முன் ஆட்சேபனை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் தந்தை ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...