24 6655714a617c8
இலங்கைசெய்திகள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Share

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு(nilantha jayawardena) எதிரான மனுவை பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (28) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான திகதியை வழங்குமாறு பிரதிவாதி நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, ஜூன் 25ம் திகதி அல்லது அதற்கு முன் ஆட்சேபனை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் தந்தை ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...