24 6655714a617c8
இலங்கைசெய்திகள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Share

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு(nilantha jayawardena) எதிரான மனுவை பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (28) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான திகதியை வழங்குமாறு பிரதிவாதி நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, ஜூன் 25ம் திகதி அல்லது அதற்கு முன் ஆட்சேபனை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் தந்தை ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...