16 2
இலங்கைசெய்திகள்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

Share

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு விசேட செயற்திட்டம்

பிறப்பு பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல குழந்தைகளுக்கு இன்னும் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால், அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அந்தந்த மாவட்டச் செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...