24 66a4d7a0c3ad3
இலங்கைசெய்திகள்

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

Share

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஜனாதிபதி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்களின் உதவியுடன் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது காவல்துறை மா அதிபர் இல்லை எனவும் இதனால் தேர்தல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபர் இல்லாவிட்டாலும், அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படுமெனவும், இதனை வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் சரிவர பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கும் மற்றும் அதனை எதிர்த்து செயல்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தேர்தல்களை கண்காணிக்கும் அனைத்து அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...