ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்

Share

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்

நாட்டிலுள்ள சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மழையுடனான காலநிலை நீடிக்காவிட்டால், இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே விவசாயத்திற்கு நீரை வழங்க முடியும் என்றும் மகாவலி அதிகார சபை அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக உடவலவ நீர்த்தேக்கம் காணப்படுகின்றது.

இதன்மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்துடன், சுமார் 25 ஆயிரத்து 300 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும், சுமார் 36 ஆயிரம் விவசாயக் குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...