24 664490eb841b9
இலங்கைசெய்திகள்

ஓமந்தையில் அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி

Share

ஓமந்தையில் அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி

கோவிட் காலப்பகுதியில் ஏ9 வீதியின் வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பல சோதனை சாவடிகள் அகற்றப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடி மாத்திரம் நான்கு வருடங்களாக அகற்றப்படாமல் நிரந்தர இராணுவ சோதனைச் சாவடியாக இயங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14) முதல் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 684a4303ee01e
இலங்கைசெய்திகள்

பிரகீத் எக்னெலிகொட வழக்கு : சாட்சியை அச்சுறுத்திய குற்றவாளி கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தல், கொலை மற்றும் காணாமல் போனது தொடர்பான மேல் நீதிமன்ற விசாரணையில்...

25 684a49556eeda
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்

Electricity Tariffs By 15 Is Unjustified Eca மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம்...

25 684a4dcaa8a7e
இலங்கைசெய்திகள்

கந்தளாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த...

images 2 3
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையை சேர்ந்த நபர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது...