கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

tamilni 286

கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் முதலைகள் உலா வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவற்றை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

பொல்கொட ஆற்றில் முதலை உலாவும் காணொளி தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

பொல்கொடா ஆறு முதலைகளின் வாழ்விடமாகும், மேலும் கொழும்பில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் ஓடைகளில் அதிக எண்ணிக்கையிலான முதலைகள் வாழ்கின்றன.

தியவன்னாவ, பொல்கொட ஏரி தெற்கு மற்றும் களனி கங்கை ஆகியவை நீண்ட காலமாக முதலைகளின் வாழ்விடங்களாக காணப்படுகின்றன.

இது ஒரு பொதுவான சம்பவம், மக்கள் இதைப் பார்க்கும்போது மட்டுமே இது குறித்து பேசுகிறார்கள். எனவே, இந்த நீரோடைகளில் நடந்து செல்லும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.

மேலும் முதலைகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்ற எந்த அறிவியல் முறையும் பயன்படுத்தப்படவில்லை.

நாம் அவற்றை அகற்றினாலும், அவை மீண்டும் அதே வாழ்விடத்திற்கு வருகின்றன. முதலைகளை அவற்றின் வாழ்விடத்திலிருந்து அகற்றுவது சரியான செயல் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version