இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

tamilni 349

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில சமயங்களில் குழந்தைகள் தமது பெற்றோரை எதிரிகளாக பார்க்கும் நிலையும் காணப்படுகின்றது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கைத் தொலைபேசிகள் மற்றும் இணையம் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாகுதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம் உள்ளதாக மனநல மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என இங்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பிள்ளைகளின் கல்வி தோல்வியடைந்து பெற்றோர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர். இந்த போதை பழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதால் குழந்தைகள் இவ்வாறு இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version