போதைப்பாக்குடன் பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஆசிரியர்களிடம் மாட்டிய நிலையில், கையை பிளேட்டினால் வெட்டியுள்ளான்.
தெல்லிப்பழை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் போதைப் பாக்கினை உண்ட நிலையில், பாடசாலைக்கு சென்றுள்ளார். இவ்விடயத்தை அறிந்த ஆசிரியர்கள் மாணவனை விசாரித்து பாக்கினையும் மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபரினால் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்ட போது குறித்த மாணவன் கையை பிளேற்றால் வெட்டியுள்ளார். காயத்திற்கு உள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவனுக்கு எவ்வாறு போதைப் பாக்கு கிடைத்தது என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
#Srilankanews
Leave a comment