STF1
இலங்கைசெய்திகள்

நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்!

Share

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, விசேட அதிரடிப்படையின் தலைமையில், விசேட பொலிஸ் குழுக்களை களமிறக்கி பாதாள உலகக்கும்பல்களை தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தென்மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளர்.

இதன் பிரகாரம், தப்பியோடிய மற்றும் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக்கும்பல் அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...