tamilni 362 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி

Share

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ளது.

தப்பியோடிய சிறைக்கைதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரென கூறப்படுகிறது.

இவர் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 10,000 ரூபா அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்த முடியாததால் இவரை எம்பிலிப்பிட்டி சிறைச்சாலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறையியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இவர் சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

மேலும், தப்பிச் சென்ற கைதியை தேடும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...